ஜனாதிபதி தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள், இரண்டு நாட்களைக்
கடக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.
இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஒதுக்கீடு
செய்யப்பட்டிருக்கும் நான்காயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவுகள்
ஏற்படலாம் என்னவும், எந்த சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்றும் அவர்
கூறினார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான
வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் 35 வேட்பாளர்கள் வேட்பு
மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.