புதிய
கூட்டணி குறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி
இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி
ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற 4ஆம் கட்ட
பேச்சுவார்த்தையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
குறித்த
பேச்சுவார்த்தை நிறைவடைந்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை
தெரிவித்துள்ளார்.
UPDATE – புதிய கூட்டணி: பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
புதிய
கூட்டணி அமைப்பது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தற்போது இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
புதிய கூட்டணி – சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் சந்திப்பு
புதிய
கூட்டணி அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான நான்காம் கட்ட சந்திப்பு இன்று
இடம்பெற்றது.
புதிய
கூட்டணி அமைக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவும் முன்னதாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த
நிலையில் இன்றைய தினம் நான்காம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இரண்டு
கட்சிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற சந்திப்புக்களில் சில
இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அடுத்தக்கட்ட
சந்திப்பு இடம்பெற்றது.