சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பொது விளையாட்டு மைதானத்திற்காக தனியாரிடம் கொள்வனவு செய்யப்பட்ட 7.5 ஏக்கர் காணியை சில தனி நபர்கள் கபளீகரம் செய்த காரணத்தினால் மைதானத்தை விஸ்தரிப்பு செய்ய முடியாமல் இருப்பதுடன் அக்கரைப்பற்றில் பொது நிறுவனங்கள் அமைப்பதற்கான பொதுக் காணிகள் இல்லாத காரணத்தினால் தனிநபர்களினால் அடாத்தாக பிடிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 27 ஏக்கர் காணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அந்த அடிப்படையில் இக்காணிகளை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர சபையில் இடம் பெற்றது.இதில் அக்கரைப்பற்றின் மூத்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவுகளையும் ஆலோசனையையும் வழங்கினர்.
அக்கரைப்பற்றின் பொதுக் காணிகளை மீட்பது ஒவ்வொறு பொது மகனுக்கும் கடமையாகும் என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்