முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையிலும் எதிர்வரும் 2 வருடங்களுக்கு ஈடுபடக் கூடாது என ஐ.சி.சி. அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான இரு சரத்துக்களை மீறிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.