வீதி விபத்தின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் கத்தியினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 10 அளவில் இரண்டு மோட்டார் வண்டிகளுக்கிடையில் ஏற்பட்ட விபத்தின் போது 33 வயது மதிக்கத்தக்க கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக 24 மதிக்கத்தக்க உதுமான் லெப்பை மொஹமட் சாஹீர் என்பவர் மீது கூரிய கத்தியினால் தாக்கப்பட்ட நிலையில், அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.