ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் சம்பிக்க மோதல்
கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சரவை எந்தவிதமான எதிர்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவையில் கோரியமைக்கு அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் புத்தளத்தை அரசு தொடர்ந்து துன்பப்படுத்தி வருகின்றது என பதிலளித்தமையினால் அமைச்சர்களுக்கிடையில் பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்ற போது, கொழும்பிலிந்து குப்கைகளை அகற்றுவது குறித்து அமைச்சர் சம்பிக்க கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதற்கு உகந்த இடமாக புத்தளத்தை பயன்படுத்துவது குறித்து தனது முன்மொழிவுகளைச் செய்துள்ளார்.
இதன்போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிஷாட் பதியூர்தின், வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்களை தாங்கிக் கொண்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்த பின்னர் துன்பத்திலே அந்த மக்கள் துவழ்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கு எந்த இழப்பீடுகளும் நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
சீமெந்து தொழிற்சாலையை அங்கு நிறுவி புத்தளத்தை மாசுபடுத்தி உள்ளீர்கள். அனல்மின் நிலையத்தை அரசு கொண்டு வந்து அந்த மக்களை கஷ்டத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றது என்று கூறியுள்ளார்.
சீமெந்து தொழிற்சாலையை அங்கு நிறுவி புத்தளத்தை மாசுபடுத்தி உள்ளீர்கள். அனல்மின் நிலையத்தை அரசு கொண்டு வந்து அந்த மக்களை கஷ்டத்திற்குள்ளேயே வைத்திருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இச்சமயத்தில் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா அரசு அபிவிருத்தி தானே செய்துள்ளது குறை சொல்ல வேண்டாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதன்போது மீண்டும் அமைச்சர் ரிஷாட் அபிவிருத்தி என்றால் இங்கையா கொண்டு வரவேண்டும் வேறு எங்கயாவது கொண்டு சென்றிருக்கலாமே.
சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்ட போது எதிர்ப்புக்களால் தானே கைவிடப்பட்டது.
இதன்போது மீண்டும் அமைச்சர் ரிஷாட் அபிவிருத்தி என்றால் இங்கையா கொண்டு வரவேண்டும் வேறு எங்கயாவது கொண்டு சென்றிருக்கலாமே.
சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்ட போது எதிர்ப்புக்களால் தானே கைவிடப்பட்டது.
புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும் போது தொழில்வாய்ப்பில் 50சதவிகிதம் தருவதாக கூறினீர்களே நடந்ததா? 1989ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை.
தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போய் உள்ளனர். அரசியல் அனாதைகளாக இருக்கும் அந்த மக்களை பார்ப்பதற்கோ கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள். இந்த விடயத்தில் நான் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். விட்டுக்கொடுக்க மாட்டேன். பலவந்தமாக திணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போய் உள்ளனர். அரசியல் அனாதைகளாக இருக்கும் அந்த மக்களை பார்ப்பதற்கோ கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள். இந்த விடயத்தில் நான் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். விட்டுக்கொடுக்க மாட்டேன். பலவந்தமாக திணிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயத்தில் அமைச்சர் கபீர்காசிம் அமைச்சர் ரிஷாட் கூறுவது சரி. அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று கூறியள்ளார்.
ஆதனபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை செயலாளரிடம் அமைச்சர் ரிஷாட் இதற்கு எதிர்ப்பு என்று எழுதிக் கொள்ளுங்கள். அமைச்சர் சம்பிக்க இந்த விடயங்களை புத்தள மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் விளக்கி மக்களின் ஒத்துழைப்பை பெறமுடியும் என்று கூறியுள்ளார்.
அச்சமயத்தில மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அநேகர் ஆனமடுவ வென்னபுவ தொகுதிகளிலிருந்து கலந்து கொள்பவர்கள இவர்கள் இது சரி என்று தீர்மானம் எடுத்தால் என்ன நடக்கும். எனவே இந்த விடயத்தில் நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று மீண்டும் ஜனாதிபதிக்கு கூறிய நிலையில் அடுத்த விடயப்பரப்பு கலந்துரையாடலுக்காக எடுக்கப்பட்டது.