பொலிஸ்மா அதிபருக்கு ஞானசார தேரா் சவால்
தெற்கைச் சேர்ந்த தன்னை, முடிந்தால் மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ்மா அதிபர் கைதுசெய்து காட்டட்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சவால் விடுத்துள்ளார்.
தம்மை கைதுசெய்வதற்கு முன்னர் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் பொலிஸாருக்கு அஞ்சி செயற்படமாட்டேன். கைதுசெய்தால் அதற்கான ஆயத்தங்களுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளமொன்றில் ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.