அண்மைய காலமாக கடும் சர்ச்சைகளுக்கு இலக்காகி வரும் நடிகர் தனுஷின் மிகப்பெரிய சிக்கலான 'யார் மகன் தனுஷ்?' என்ற சர்ச்சைக்கு தீர்வு பிறந்து விட்டதாக கருதப்படுகிறது
இதில் சிவகங்கையைச் சார்ந்த தம்பதியினர் 'தனுஷ் எங்கள் பிள்ளை' என வழக்குத் தொடுத்தனர்.
இதை தொபடர்ந்து தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இதன் பிறகு தனுஷின் உடலில் இருந்து அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளது என ஒரு செய்தி வெளிவர தனுஷிற்கு மிகவும் நெருக்கடியாக அமைந்தது.
ஆனால், தற்போது அந்தத் தம்பதியினர் மகன், சிறு வயதில் ஓடி போனவன் கிடைத்தே விட்டானாம். அவனே போலீசில் ஆஜராகி உள்ளான். இதனால் பல நாட்கள் சுற்றி வந்த பிரச்சினை தனுஷிற்கு ஒரு வழியாக தீர்ந்தது என கூறப்படுகின்றது.