திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி, வைரமுத்துவைக் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு அவருக்கு நினைவிழப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் நொற்று காரணமாகக் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, பின்னர் டிசம்பர் 23-ஆம் தேதி வீடு திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து வெளியாகி தற்போது கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் அவர், இதுவரையிலும் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதேபோல், அவரது பெயரிலும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் கூட, கருணாநிதி வாயே திறக்கவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் ஏற்பட்ட கொப்புளங்கள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்புளங்களை முழுமையாக போக்க அளிக்கப்படும் மருந்துகளை ஏற்கும் வலிமை அவரது உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி, ரஜினி காந்த், வைரமுத்து, என யாரையும் அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பழைய சம்பவங்களை அவருக்கு நினைவுபடுத்தினால், அவருக்கு நினைவு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியிருப்பதால், அதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அவருக்கு குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரால் பேசக் கூட முடியாமல் உள்ளது.