|
புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றையதினம் (19.02.2017) நடைபெற்றது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல்இ அமரர்களான திரு. திருமதி சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட 'தாயகம் சொக்கலிங்கம் அகடமி'யானது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக 'தாயகம் சமூக சேவையகமாக' மாற்றப்பட்டு செயலாற்றி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
இதன் நிர்வாகக் குழுவானதுஇ இன்றையதினம் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் கூட்டப்பட்டது. இதில் இதுவரை காலமும் பிரதம ஆலோசகராக இருந்த திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டதோடு போசகராக திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்:
போசகர் - திரு. எஸ்.கே சண்முகலிங்கம் (சமூக சேவகர்இ முன்னாள் அதிபர்)
தலைவர் - திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை (சமூக சேவகர்)
செயலாளர் - செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு (சமூக ஆர்வலர் ஏழாலை)
பொருளாளர் - திருமதி யோகநாதன் மரிஸ்ரெலா
உப தலைவர் - செல்வி சேனாதிராசா சாந்தினி
உப செயலாளர் - செல்வி றோசஸ் புஷ்படொமின்ரில்டா (காஞ்சனா)
ழூழூழூ நிர்வாக சபை உறுப்பினர்களாக:-..
செல்வி. மேரிஆன் மரியதாஸ் (கயானி)
செல்வன். நடராசா நவநேசன்
செல்வி. மதுமிதா வேதநாயகம்
செல்வி. அனுஷா சந்திரபாலன்
செல்வன். சன்சியோன் அன்ரன் தாவீது
செல்வன். ஜான்றோசன் அருள்தாஸ் ஆகியோரும்இ
எண் பார்வையாளராக (கணக்குப் பரிசோதகர்)..-
திருமதி குகநேசன் மஞ்சுளா அவர்களும்இ
பிரதம ஆலோசகராக...-
புங்குடுதீவின் மண்ணின் மைந்தரான திரு. லட்சுமணன் இளங்கோவன் (சமூக சேவகர்இ வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர்) அவர்களும்அ
ஆலோசகராக..-
திரு. கணபதிப்பிள்ளை வாகீசன் (கிராம சேவகர்) அவர்களும்
தெரிவு செய்யப்பட்டார்கள்.
மேற்படி 'தாயகம் சமூக சேவையகம்' அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கருத்துப் பரிமாறல்கள் மற்றும் கலந்துரையாடலைத் தொடர்ந்து எதிர்வரும் பங்குனி (மார்ச்) மாதம் 18ஆம் 19ஆம் திகதிகளில் 'புங்குடுதீவின் அனைத்து விளையாட்டுக் கழகங்களில்' இருந்தும்இ இருபது வயதுக்குட்பட்டவர்களை இணைத்த உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டியை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி விளையாட்டுப் போட்டியில் அனைத்து விளையாட்டுக் கழகங்களில் இருந்தும் கலந்து கொள்வோர் இருபது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருக்க வேண்டுமெனவும்இ மேற்படி விளையாட்டுப் போட்டியை கரந்தலி அன்னை வேளாங்கன்னி மைதானத்தில் நடாத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும்இ முதல்நாளான மார்ச் 18ஆம் திகதி அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமான உதைபந்தாட்டப் போட்டியினை நடாத்துவதோடு மறுதினமான மார்ச் 19ஆம் திகதி உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியையும் மற்றும் தாயகம் அமைப்பினால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் (கயிறு இழுத்தல்இ பனிஸ் சாப்பிடுதல்இ கிடுகு பின்னுதல்இ பனையோலைக் கைப்பணிப் போட்டி) என்பவற்றை நடத்துவதென்றும்இ மேற்படி விளையாட்டுப் போட்டியின் இறுதியின் இறுதியில் முதல்நாள் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியினை நடாத்துவதோடுஇ அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி மார்ச் 19ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில்இ பிரதம விருந்தினராக வட மாகாணசபை ஆளுநரின் செயலாளர் திரு. இலட்சுமணன் இளங்கோவன் அவர்களும்இ சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் திரு. விந்தன் கனகரத்தினம்இ திரு. பாலச்சந்திரன் கஜதீபன்இ மற்றும் திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் (சமூக ஆர்வலர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 24.02.2017 (அடுத்த வெள்ளிக்கிழமை) அன்று சிவராத்திரியினை முன்னிட்டுஇ வீராமலை நாயன்மார் கோயிலிலும்இ பெருங்காடு கிராஞ்சியம்பதி சிவன்கோயிலிலும் 'தாயகம் அமைப்பின்' சார்பில்இ தாயகம் அமைப்பின் மாணவஇ மாணவிகளினால் நடன விருந்து வழங்கப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. நன்றி.
இவ்வண்ணம்..
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாருஇ
செயலாளர்இ
'தாயகம் சமூக சேவை அகம்'
புங்குடுதீவு -12.