பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கோருமாறு பிரதேச செயலாளருக்கு றிஷாட் பணிப்பு
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.
செட்டிகுளப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (13) காலை இடம்பெற்றபோது, குறித்த கூட்டத்தில் சில அதிகாரிகள் சமூகமளித்திருக்கவில்லை.
இதனையடுத்தே, உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
அமைச்சர்களும் எம்பிக்ககளும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்குபற்றும் போது அதிகாரிகள் அசிரத்தைக் காட்டுவது கண்டனத்துக்குரியதென அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.