– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
வழமைபோன்று இன்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் நடுவோடைக் கடற்கரைப் பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.