2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவிலாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அரசியல் சாசனம் தொடர்பில் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
|
சீனாவிற்கு காணிகளை வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அப்பத்தையும் மஹிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார். இலங்கை அரசியலில் அப்பம் தற்போது அடையாளப் பொருளாக மாறியுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன விருந்துபசாரமொன்றில் அப்பத்தை சாப்பிட்ட பின்னரே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
Thursday, December 29, 2016
புதிய ஆண்டில் புதிய அரசாங்கம்-மஹிந்த

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-